லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி , நரேன் ,அர்ஜுன் தாஸ் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகிய கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை படம் வெளியாகிய போது உடனடியா எடுக்கவுள்ளதாக இயக்குநர் அறிவித்திருந்தார். ஆனால் அவர் மிகவும் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்புகளில் இவ்வளவு காலம் பிஸியாக இருந்தார். தற்போது இந்த பட வேலைகள் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில் இயக்குநர் அடுத்து தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கேர்சிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது இவர் குறித்த தொகையினை தயாரிப்பு நிறுவனத்துடன் திருப்பி கொடுத்துள்ளார். மற்றும் இவர் உடனடியாக கைதி 2 வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ வெளியீட்டினை எதிர்பார்க்கலாம்
Listen News!