• Mar 10 2026

பாண்டியனுக்கு கன்னத்தில் அடித்தது போல பேசிய கதிர்! குற்ற உணர்ச்சியில் உண்மை சொல்லும் ராஜி? அடுத்து நிகழப்போவது?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர் 2. 

இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ராஜியின் பணத்தையும் நகைகளையும் திருப்பிக் கொடுக்குமாறு பாண்டியன் கோமதியிடம் சொல்கிறார்.

மேலும், திரும்பக் கொடுக்க முடியுமா? முடியாதா? என கேட்டு சொல்லு என கோமதியிடம் கோபத்தில் கத்த, அதான் அந்த பணம்  செலவாகிட்டு என்று சொல்கிறேன் தானே, அது ஒன்னும் இவர் பணம் இல்ல, என்ட  வாழ்க்கையில என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என பாண்டியனை எதிர்த்து கதைத்து விட்டு வெளியே செல்கிறார் கதிர்.


இதைத் தொடர்ந்து அவன் எனக்கு இனி பிள்ளையும் இல்ல, நான் அவனுக்கு அப்பனும் இல்லை என பாண்டியன் கோபத்தில் சொல்கிறார்.

இதை அடுத்து குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் ராஜி நடந்த  உண்மைகளை சொல்வதற்காக செல்கிறார். இதுதான் தற்போது வெளியான அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ.

இந்த சீரியலில் இனி என்ன நடக்கும் ராஜு உண்மை சொல்வாரா? அப்படி சொன்னால் பாண்டியன் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement