தமிழ் சினினிமாவில் இயக்குநர் பி.எஸ் மித்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சர்தார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்ததோடு இவரின் வித்தியாசமான கெட்டப் ரசிகர்களையும் கவர்ந்திருந்தது.
த்ரில்லர் கதையான இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும் என மித்ரன் படத்தின் சக்சஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அறிவித்தது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.மேலும் இப்படம் உலகம் முழுவதும் 70 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கார்த்தி நடிப்பில் வெளியாகிய விருமன் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காகவும் ரசிகர்கள் காத்திருப்பதும் முக்கியமாகும்.
அதே போல் கைதி 2 படப் பணிகளும் அடுத்த ஆண்டு ஆரம்பமாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!