• May 02 2024

பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மகனைப் பார்த்திருக்கின்றீர்களா?- அவர் எப்படி இறந்தார் தெரியுமா ?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  60 ஆண்டுகளுக்கும் மேலாக  குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபல்யமான பழம் பெரும் நடிகர் தான் நம்பியார்.கேரளாவைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.அதன் பின்னர் தான் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.


மேலும், இவர் திரைப்படங்களில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஹீரோ என்று சொல்லலாம். இவர் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்தார். இவர் தீவிர ஐயப்பன் பக்தர். இநத நிலையில் இவர் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறப்புக்குள்ளானார்.


இந்நிலையில் நம்பியாரின் மகனுடைய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நடிகர் நம்பியார் அவர்கள் 1946 ஆம் ஆண்டில் தன்னுடைய உறவுக்காரப் பெண்ணான ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சுகுமாரன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் அகில இந்திய ஐயப்ப சேவ சங்க தலைவர் ஆவார். அதுமட்டுமில்லாமல் இவர் பாஜக தேசிய நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மேலும், பாஜகவில் பல முக்கிய பொறுப்புகளை இவர் வகித்து இருக்கிறார். மேலும், இவர் பாஜக தலைவர் அத்வானி, நடிகையும், மறைந்த முதல்வருமான ஜெயலலிதா ஆகியோருடன் நல்ல நட்பு உறவில் இருந்தார்.


மேலும், இவர் ராணுவத்தில் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார். இவர் மத்திய கருப்பு பூனை பாதுகாப்பு பணியின் பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார்.கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement