• May 04 2024

சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த காஜல் அகர்வால்- திரையுலகில் பரவி வரும் பரபரப்புத் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவார் என்று கூறப்பட்டது.

இருப்பினும் சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கர்ப்பமானதால் தொடர்ந்தும் படங்களில் நடிப்பதைக் குறைத்து விட்டார். இந்தியன்-2 படத்திலும் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலையே ஒப்பந்தம் செய்தனர். ஆனால் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி அந்த படத்தில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தற்போது குழந்தையை வளர்ப்பதிலேயே முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனால் புதிய படங்களில் நடிப்பதை ஆர்வம் காட்டாமல் இருக்கின்றார்.

இந்த நிலையில் சினிமாவை விட்டு முழுமையாக விலகி குடும்பத்தை கவனித்துக்கொள்ள காஜல் அகர்வால் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் பேச்சு கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஜல் அகர்வாலுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, “குழந்தையை வளர்ப்பதற்காகவே சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் ஓய்வு எடுக்க இருக்கிறார். குழந்தை வளர்ந்ததும் மீண்டும் நடிக்க வருவார்'' என்றும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement