• May 18 2024

பிக் பாஸுக்கு பிறகு தற்கொலைக்கு முயன்றேன்: பிரபல நடிகையின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லாக் அப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை பாயல் ரொஹத்கி. முன்னதாக இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டபோது ராகுல் மகாஜன் மீது காதல் கொண்டார் பாயல் என்று கிசுகிசு கிளம்பியது.

இந்நிலையில் அது பற்றி லாக் அப் வீட்டில் பாயல் தெரிவித்ததாவது….

நான் இதற்கு முன்பு கலந்து கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாஸ் 2. அந்த நிகழ்ச்சியிலும் என்னை மோசமாக காட்டினார்கள். அங்கு ஒரு காதல் கதை நடந்தது. அதனால் என் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நான் பிரபலமானேன். ஆனால் நெகட்டிவான முறையில் பிரபலமானேன்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பினு் அதிகமாக மது அருந்தினேன். தொடர்ந்து 48 மணிநேரம் எல்லாம் மது அருந்தியிருக்கிறேன். மதுவுக்கு அடிமையானேன். என் அம்மாவுக்கு தெரியாது. இரவா, பகலா என்பது கூட தெரியாத அளவுக்கு மது அருந்தினேன்.

அத்தோடு புகைப்பிடித்தேன். ஒரு நல்ல பையன் கிடைத்தால் இதை எல்லாம் விட்டுவிடுகிறேன் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். எனக்கு தற்கொலை எண்ணம் கூட வந்தது. என் கைநரம்பை கட் செய்தேன். அப்பொழுது தான் தனியாக இருந்தேன் என்ற பகீர் தகவலை வெளியிட்டார்.இந்த வியடம் ரசிகர்களுக்கு தெரியவர அட இவரா என ஷாக்காகி உள்ளனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement