• Sep 20 2024

தனது ரத்தத்தை எடுத்து ஃபேஷியல் செய்த ஜுலி- இது என்ன விபரீத விளையாட்டு-ஷாக்கான ரசிகர்கள்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் ஜுலி. இவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற முதல் 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பிரபல்யமானர்.

இருப்பினும் பிக்பாஸில் பங்கு கொண்டு ஓவியா பற்றி மற்றவர்களிடம் பொய்பேசி கமலிடம் கொத்தாக மாட்டிக்கொண்டார் ஜூலி. இதையடுத்து, பிக் பாஸ் வீட்டை விட்டு ஜூலி வெளியே வந்த பின்பும், இணையத்தில் அவரை பலர் ட்ரோல் செய்து கண்டபடி விமர்சனம் செய்தனர்

ஆனால், சமீபத்தில் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டு தனக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைத்தார்.மேலும், ஜூலி 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை படிக்க வைத்த வருகிறார். இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தார் என்றார். இதன்மூலம் அவருக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது சில போட்டோக்களை வெளியிடு வருகிறார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான இருக்கும் ஜூலி சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.

தற்போது ஜூலி தனது ரத்தத்தை வைத்து பேசியல் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சிரஞ்சி ஊசி மூலம் ரத்தத்தை எடுத்து அதை பதப்படுத்தி அதன் மூலம் ஜூலி ஃபேஷியல் செய்து கொள்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர் அதிர்ச்சி அடைந்து இதுஎன்ன விபரீத விளையாட்டு என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement