• May 20 2024

பச்சை உடையில் பளிச்சிடும் ஆன்ட்ரியா…வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்படும் நாயகிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ஆன்ட்ரியா. பன்முகப்பட்ட ஆளுமை கொண்ட நடிகையாகத் திகழும் இவர் நடிப்பதோடு மட்டும் நின்றுவிடாது பாடகியாகவும், பின்னணிப் பாடகியாகவும், பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் தனது திறமையை பல துறைகளில் வளர்த்து கொண்டவர்.

தனது தனித்துவமான குரலினாலும், நடிப்பினாலும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்த ஆன்ட்ரியா 2007 இல் வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்களாக 'ஆயிரத்தில் ஒருவன்','மங்காத்தா', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'புதிய திருப்பங்கள்', 'விஸ்வரூபம்', 'அரண்மனை' போன்ற படங்களை குறிப்பிடலாம்.

இதுமட்டுமல்லாது ஆன்ட்ரியா பல தெலுங்கு, தமிழ் திரைப்பட பாடல்களுக்கு பின்னணி குரல் கொடுத்து பாடி ரசிகர்களை அசத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவரது குரலில் அண்மையில் வெளியான 'புஷ்பா' படத்தின் 'ஓ ஆண்டவா ….' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வைரலாகி பட்டிதொட்டி எங்கும் ஒலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாது பல நிறுவனங்களின் விளம்பரப்படங்களில் நடிப்பதோடு கவர்ச்சியாகவும் தனது போட்டோவை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவார். குறிப்பாக எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பதோடு மட்டுமல்லாது இவர் அடிக்கடி தனது புகைப் படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் கொண்டவர்.

இந்நிலையில் தற்போது இவர் பச்சை நிற உடையணிந்து கவர்ச்சிப் புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தமது கமெண்டுகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement