• Apr 30 2024

கமலின் பிரம்மாண்ட படத்தில் பணியாற்றிய ஜெயம் ரவி- இதுவரை தெரியாமல் போச்சே -ஆள் செம்ம கில்லாடி தான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

திரை உலகில் ஜெயம் ரவி பற்றி அறியாதவர்கள் யாருமில்லை. 2003 ஆம் ஆண்டு அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் "ஜெயம்" என்னும் படத்தில் இவர் அறிமுகமானார். இவருடன் கோபிசாந், சதா, நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் பூஜையின் போது கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். அப்பொழுது செண்டிமெண்ட் காரணமாக கமல் ரவியை வைத்து ஒரு காட்சி இயற்றியுள்ளார். மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியும் அடைந்தது.

இவர் பிரபல எடிட்டர் மோகனின் மகன் ஆவார். இவரின் அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குநர் ஆவார். இருவரது காம்பினேஷனிலும் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்கள். நீண்ட காலமாக வெற்றிக்கு போராடிக்கொண்டிருக்கும் இவருக்கு "பொன்னியின் செல்வன்" அதிர்ஷ்ட வாய்ப்பாகத்தான் அமைந்தது எனக் கூற முடியும். இதையடுத்து இவர் "பொன்னியின் செல்வன் 2”, ” சைரன்”, ”ஜெயம் ரவி 30” எனும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


2001 ஆம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தானுவின் படைப்பில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம்தான் ”ஆளவந்தான்”. இப்படத்தில் இரு வேடங்களில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல். இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் எடிட்டர் மோகனும் நெருங்கிய நண்பர்கள். 


படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் எடிட்டர் மோகன் தனது இளைய மகனான ரவியை இப்படத்திற்கு உதவி இயக்குநராக சேர்த்து விட்டாராம். ரவியும் சில வாரங்கள் அப்படத்தில் பணியாற்றினாராம். ரவி கமலின் தீவிர ரசிகர் என்பதாலும் கமலின் நடிப்பு நுட்பங்களை அவதானிப்பதற்காகவே அங்கு வந்தாராம் என்றும் சுரேஷ் கிருஷ்ணா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement