சின்னத்திரையில் ஒளிபரப்பான கனாகனாணும் காலங்கள் ஆஃப்பீஸ் சத்யா போன்ற சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் விஷ்ணு. இவர் தற்பொழுது கலர்ஸ் தமிழில் நடிகை ரக்ஷிதாவுடன் இணைந்து "இது சொல்ல மறந்த கதை" என்ற தொடரில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.அதில் உங்களுடைய அடுத்த இலக்கு என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் ஆபீஸ் தொடருக்கு பிறகு, ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அந்த திரைப்படங்கள் எனக்கு சரியாக கைகொடுக்கவில்லை. சத்யாவிற்கு பிறகு இரண்டாவது வாய்ப்பு அமைந்துள்ளது. அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்துவது? எப்படி வித்தியாசமாக நடிப்பது? எந்த மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பது போன்றவை குறித்து யோசித்து வருகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் ரசிகர்கள் என் மீது கொண்டுள்ள அன்பு என்பது தீராத அன்பாகும்.கனா காணும் காலங்கள் தொடர் முதல் சத்யா வரை நான் நடிக்கும் தொடர்களில் நானே தான் டப்பிங் கொடுத்து வந்தேன். இது சொல்ல மறந்த கதை தொடருக்கு வெளியே இருந்து டப்பிங் செய்வதாக தெரிவித்தார்கள். இது அவர்களுடைய முடிவு. என்னை பொறுத்தவரை நடிப்பு 50 சதவீதம், டப்பிங்பேசுவது 50%. கடினமான உழைப்பை மட்டும் கொடுக்க வேண்டும் என்பதாகும். நான் எப்போதும் வெளிப்படையாக பேசுவேன். ஜால்ரா அடிக்க மாட்டேன். இதனால் நிறைய எதிர்ப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.
அடுத்து உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்ட போது பெண்களை பார்த்தால் பயமாக இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை. ஐடி துறையில் வேலை பார்க்கும் பெண் ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளும்போது புரிதல் இருக்க வேண்டும். அவ்வாறு புரிதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக இருக்கும் எஎன்றும் கூறியுள்ளார்.
Listen News!