• Apr 28 2024

13 வயதில் அம்மாவான ஊர்வசி- நீண்ட நாளுக்கு பின் வெளி வந்த ரகசியம்- படிக்க முடியாமல் போனதற்கு இது தான் காரணமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

 80,90களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த நடிகை தான் ஊர்வசி.சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்ற இவர் குழந்தை நட்சத்திரமாக தனது கெரியரை ஆரம்பித்தார்.இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி.  ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணிபுரிந்திருக்கிறார். 

 இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் படிப்பைத் தொடர ஊர்வசியால் முடியவில்லை. ஊர்வசிக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்துள்ளதை கண்ட பாக்யராஜ், தனது முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிக்க ஊர்வசியினை ஒப்பந்தம் செய்தார். முந்தானை முடிச்சு பட வெற்றி மூலம் தமது படமும் வெற்றி பெறலாம் என கருதிய பிற இயக்குநர்கள் ஊர்வசி முந்தானை முடிச்சு படத்தினை முதலில் முடிக்க உதவினார்கள்.


இந்த நிலையில் முந்தானை முடிச்சு படத்தின் கதைப்படி பாக்யராஜை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு பொய்யான சத்தியத்தை செய்து திருமணம் செய்து கொள்ளும் ஊர்வசி பாக்யராஜின் குழந்தையை தன் குழந்தையாக பாவித்து வருவார். இது ஒரு பக்கம் பாக்யராஜிற்கு மனமாறுதலை ஏற்படுத்தும்.


ஆனால் இந்தக் குழந்தைக்கு அம்மாவாக நடித்த ஊர்வசியும் அப்போது ஒரு குழந்தை நட்சத்திரம் தான். அந்தப் படத்தில் ஊர்வசி நடிக்கும் போது அவருடைய வயது 13 தானாம். ஆனால் படத்தில் பார்க்கும் போது அப்படி தெரியாது. ஆனால் உண்மையிலேயே 13 வயதில் தான் முந்தானை முடிச்சு படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தேன் என்று ஊர்வசி ஒரு பேட்டியில் கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement