• Sep 20 2024

இயக்குநர் பார்த்திபன் அடுத்து இப்படிபட்ட ஒரு படத்தை இயக்குகிறாரா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குநர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை தன் வசம் கொண்டவர்.

இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் தற்போது வரை பேசப்படுகின்றது. படத்தின் பெயரிலோ ஏதாவது மக்களுக்கு மனதில் நிற்கும் அளவிற்கு ஒரு விஷயத்தை செய்து விடுவார்.

தற்போது அவர் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். மேலும் இப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம் என்ற பெருமையோடு வெளியாகி இருக்கிறது.

இதுவரை இரவின் நிழல் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் தற்போது பார்த்திபன் அடுத்து ஒரு புதுவித படம் எடுக்கிறார். அதில் மனிதர்களே இல்லை, முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து படம் இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

மேலும் இந்த விஷயத்தை கேட்ட ரசிகர்கள் அட விலக்குகளை வைத்தே ஒரு படமா என வாய் பிளந்து செய்தியை படிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement