பிரபல போஜ்புரி பட நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஆகான்க்சா துபே (வயது 25). இவர் உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தூக்கு போட்ட நிலையில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு முந்தின நாள் இரவு, பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியபடி, செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கின்றார். இதனையடுத்து தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்து உள்ளது.
மேலும் நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்த ஆகான்க்சா, அதுபற்றி, காதலர் தினத்தில் இன்ஸ்டாகிராமில் தங்களது காதலை அவர்கள் இருவரும் உறுதிப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படப்பிடிப்பு ஒன்றுக்காக ஓட்டலுக்கு வந்த அவர் மரணம் அடைந்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவருடன் நடித்த சக நடிகையான பிரியான்ஷூ சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில் "ஆகான்க்சாவுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இல்லை. ஆனால் நாங்கள் ஒன்றாக ஒரு படத்தில் நடித்திருக்கிறோம். அதில் நாங்கள் சகோதரிகளாக வருவோம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால், அவரை பற்றி நான் அறிந்தவரை, அவர் தற்கொலை செய்திருக்க முடியாது. அதுபோன்ற நபர் அவர். ஏதோ ஒன்றுக்காக உயிரிழக்க வேண்டும் என அவரது மனம் கூறுமென்றால், முதலில் அதனை கொன்று விடுவார்" எனக் கூறியுள்ளார்.
மேலும் "அவரின் மரணத்தின் பின்னணியில் என்ன உள்ளது என எனக்கு தெரியாது. அவரது பெற்றோரை நினைக்கும்போது மிகவும் வருத்தம் ஏற்படுகிறது. ஏனெனில், வீட்டை அவர் மட்டுமே பார்த்து வந்துள்ளார். இறப்பதற்கு முன்னர், வீட்டுக்கு யார் பணம் கட்டுவார்கள் என்றும் காருக்கு வாங்கிய கடனை யார் அடைப்பார்கள் என்றும் நினைத்திருக்கலாம். அவர் தற்கொலை செய்திருப்பார் என்று என்னால் நினைக்க முடியவில்லை. சட்டம் என்று ஒன்று உள்ளது. என்ன நடக்கிறது என பார்ப்போம்" எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது இதேபோன்று ஆகான்க்சாவின் மற்றொரு சக நடிகையான காஜல் ராகவானி சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், உன்னால் உன்னை கொல்ல முடியும் என்று ஒருபோதும் நான் நம்பமாட்டேன். கடவுள் இருக்கிறார். அவர் நிச்சயம் உனது உயிருக்கான விலையை கொடுக்க செய்வார். இன்றில்லா விட்டாலும் நாளை, அது நடக்கும். உயிரை கொடுப்பதிலோ அல்லது யாருடைய உயிரையும் எடுப்பதிலோ, உண்மையான அன்பின் விலை வழங்கப்படுவதில்லை" என்றார்.
மேலும் "வாழ்ந்தபோது இல்லாத மகிழ்ச்சியை இப்போது நீ பெற்றிருப்பாய் என நம்புகிறேன். நீ எங்கிருந்தபோதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" எனவும் தெரிவித்து உள்ளார்.
Listen News!