• Apr 28 2024

'அவர் நடிச்சா யாரு பார்ப்பாங்கன்னு நினைச்சேன்'-தி லெஜெண்ட் திரைப்படம் குறித்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் தி லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் உருவாகின்றது.

இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் ஜோடியாக ஹிந்தி நடிகை ஊர்வசி நடித்துள்ளார்.மேலும் பிரபு, மயில் சாமி, விஜய் குமார், ரோபோ சங்கர் ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படத்துக்குவேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ளார் லெஜெண்ட் சரவணன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படத்தை தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியிட உள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

லெஜெண்ட் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டே, தமன்னா, ராய் லட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவ்துலா, டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பங்குபெற்றனர்.

இவ்விழாவில் பேசிய ஹாரிஸ் ஜெயராய் முதலில் இந்த படத்தின் கேட்டதும் பண்ண மேடன் என்று சொல்லிவிட்டாரம் மீண்டும் இப்படத்தின் இயக்குநர் இக் கதையை மாற்றி விட்டு வந்து சொன்னதும் ஒப்புக்கொண்டதாக கூறி உள்ளார்

லெஜெண்ட் சரவணன் தனது நண்பர் என்றும் அவருடன் 12 வருடம் பழக்கம் இருப்பதாக தெரிவித்த ஹாரிஸ் இப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்று சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் நடிச்சா யாரு பார்ப்பாங்கன்னு நினைச்சேன் .படத்தில் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படத்தின் மிகப்பெரிய பலமே படக்குழு தான்” என்றும் ஹாரிஸ் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement