• Apr 28 2024

“கார்த்தி மாதிரி நாகரீகமான எந்த நடிகரையும் நான் பார்த்ததில்லை“- விஜய் பட நடிகர் பாராட்டு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்பொழுது சர்தார், பொன்னியின் செல்வன் ,விருமன் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதில் விருமன் திரைப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.

இவரது நடிப்பில் வெளியான முக்கிய திரைப்படம் தான் சுல்தான். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். கார்த்திக்கு அப்பாவாக நடிகர் நெப்போலியன் நடித்து கலக்கியிருப்பார்.

இப்படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கிருந்ததோடு பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய நடிகர் நெப்போலியன் கார்த்தியிடம் உள்ள அந்த நாகரீகமான பழக்கம் எந்த ஒரு நடிகர் இடமும் பார்த்ததில்லை என புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

அதாவது சுல்தான் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு டப்பிங் பேசி விட்டு அன்று இரவு ஹோட்டலில் இருந்து ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த நெப்போலியனை நடிகர் கார்த்தி நேரில் அந்த ஹோட்டலுக்கே சென்று நடித்து கொடுத்ததற்கு நன்றி என தனது நன்றிகளை தெரிவித்து விட்டு செண்ட் ஆப் செய்து வைத்ததாக நெப்போலியன் கூறியுள்ளார். மேலும் இந்த நாகரீகமான பழக்கம் கார்த்திகை தவிர வேறு எந்த நடிகர் இடமும் இதுவரை நான் பார்த்ததில்லை என நடிகர் வியந்து பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement