• Apr 28 2024

“மனதிற்கு கஷ்டமாக உள்ளது..”-நெல்சன் பற்றி மனம் திறந்து பேசிய லோகேஷ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். ஒரு சில படத்தின் மூலமே உச்சம் தொட்டுவிட்டார்.யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாது சில குறும்படங்களை இயக்கிவிட்டு மாநகரம் என்ற படத்தை இயக்கினார் லோகேஷ்.

மேலும் முதல் படத்திலேயே ரசிகர்கள் முதல் சினிமா வட்டாரங்களை சார்ந்தவர்கள் வரை அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார். பின்பு கார்த்தி நடிப்பில் வெளியான கைதி இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.

முற்றிலும் வித்யாசமான கோணத்தில் இவர் இயக்கிய கைதி திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தது என்று தான் கூற வேண்டும்.

எனினும் இதன் பின்பு தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். மிகப்பெரிய நட்சத்திரத்தின் படம் என்பதால் சற்று கமர்ஷியல் விஷயங்களையும் கலந்து இவர் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் வசூலில் அடித்து நொறுக்கியது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தின் வெற்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கே பெருமையை சேர்த்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நெல்சன் மற்றும் பீஸ்ட் படத்தின் ட்ரோல்ஸ் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த லோகேஷ், நெல்சன் எனக்கு நெருங்கிய நண்பர். எப்போதும் ஜாலியாக பேசக்கூடிய இயல்புடையவர்.

மேலும் அவரை பற்றிய சில ட்ரோல்களை பார்க்கும்போது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. அத்தோடு வெற்றி பெறும்போது கொண்டாடிவிட்டு தோல்வி அடையும்போது இவ்வாறு கடுமையாக விமர்சிப்பதை சற்று தவிர்க்கலாம் என்றார் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement