• Jun 26 2025

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் அவர் எங்க ஆளு!முருகன் மாநாடு குறித்து பேசிய சத்யராஜ் !

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் 90S கால காட்டத்தில் கதாநாயகனவும்  வலம் வந்தவர் சத்யராஜ். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் . சமீபத்தில் முருகன் மாநாடு நடைபெற்றது . அதில் பல பிரபலங்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர். இந்த மாநாடு குறித்தது  நடிகர் சத்யராஜ் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்ற்ன .


நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது " கோயிலுக்கு போவோம் பிரசாதம் வாங்கி சாப்பிடுவோம் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று கூறினார். மேலும் தன்னுடைய மச்சான் கூட ஒரு கோயில்ல தர்மா கர்த்தாவாக இருக்கின்றார் எனவும்  அங்க பொங்கல் வடை எல்லாம்  நன்றாக இருக்கும் . எல்லாவற்றையும் நல்ல வாங்கி சாப்பிட்டு வீட்டு வெளியே வந்து ஜாதி மறுப்பு ,தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் அதனால்  எங்களை ஏமாற்றுவதாக நிலைத்து நீங்கள் எங்களிடம் ஏமாறுகின்றீர்கள்  என்று கூறியிருந்தார் .


தொடர்ந்து கூறும் போது முருகனுக்கு விழா எடுத்து இவர்களை ஏமாற்றி விட்டோம் என்று நினைத்து கொண்டு இருப்பீர்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அப்படி இருந்தாலும் அவர் எங்க ஆளு . அவர் சைலன்டா இருந்து கொண்டே  ஆப்பு வைத்து விடுவார். நீங்கள்  அவர் பெயரில் எங்களுக்கு ஆப்பு வைக்கலாம் என்று பார்க்கின்றீர்கள்ஆனால் அவர் உங்களுக்கு ஆப்பு வைத்து விடுவார் . என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர் .

 

Advertisement

Advertisement