நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி விருந்தாக இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அனுதீப் இயக்கியுள்ள இப்படம் தமிழகத்தில் 600 திரைகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் முதல் ஷோ இன்று அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து, தார தப்பட்டை முழங்க ஆட்டம் போட்டு அமர்களப்படுத்தியதால் தியேட்டரே திருவிழாக்கோலம் பூண்டது.
மேலும் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரின்ஸ் படத்தின் முதல் பாதியை பார்க்கும்போது இது பண்டிகைக்கான படம் என்பது தெரிகிறது. குடும்பத்தோடு என்ஜாய் பண்ணி பார்க்கக்கூடிய படமாக உள்ளது. இது அனுதீப் சம்பவம். இரண்டாம் பாதியும் நன்றாக ஆரம்பித்துள்ளது என குறிப்பிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சிவகார்த்திகேயனும் அதிகாலை பிரபல தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளார். அப்போது அவரை கண்டதும் ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்ததோடு அவரை போக விடாமல் நெருக்கடி கொடுத்துக் கொண்டனர். மேலும் பிரின்ஸ் படம் குறித்து சிவகார்த்திகேயன் அதில் கூறியதாவது
ரசிகர்கள் இவ்வளவு சர்ப்போட் கொடுப்பாங்க என்று நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. படம நல்லா இருக்கு நான் எதிர்பார்க்காத சீன்கள் கூட ரசிகர்களுக்கு பிடிச்சிருக்கு நான் இப்போ இன்னொரு தியேட்டருக்கு போகிறேன். அங்கு போயிட்டு சொல்லுகிறேன் என கூறியதோடு ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!