பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் 3ஆவது வாரத்தை நிறைவு செய்யக் காத்திருக்கின்றது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டியாளர்களே மீதமாக உள்ளனர்.
அதாவது கடந்த வாரம் ஜிபி முத்து, சாந்தி ஆகியோர் வெளியேறிச் சென்றனர். அதேபோல் இன்றைய தினம் அசல் கோளார் வெளியேறுவார் எனக் கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோவில் கமலின் பார்வை ஆயிஷா பக்கம் திரும்பி உள்ளது போல் தெரிகிறது. அதாவது நேற்று ஷெரினாவை வறுத்தெடுத்தது போல் இன்று ஆயிஷாவை கமல்ஹாசன் வறுத்தெடுத்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில் இன்றைய தினத்திற்குரிய இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகி இருக்கின்றது. அதில் "தனக்கென்று சொந்தமாக யோசனை இல்லாதவர் யார்" என்று ஆண்டவர் கேட்கின்றார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் உடனே அசீம் எழுந்து ரொபேர்ட் மாஸ்டரை கூறுகின்றார். அதாவது ரொபேர்ட் மாஸ்டர் ஒரு லைட் எனவும் அதற்கான சுவிச் அமுதவாணன் கிட்டத் தான் இருக்கு எனவும் கூறி அவரை வம்பிற்கு இழுக்கின்றார்.
அதற்கு உடனே ரொபேர்ட் மாஸ்டர் எழுந்து "நான் எல்லார்கிட்டேயும் பேசுவேன் சேர். அசீம் கிட்ட இருக்கிற துப்பாக்கி என் பக்கத்தில் திரும்பிடுமோ என்ற பயத்தில் தான் எப்பிடி இருக்கீங்க, சாப்பிட்டீங்களா என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்" எனக் கூறி இருக்கின்றார்.
இதோ அந்த அட்டகாசமான ப்ரோமோ வீடியோ...!
Listen News!