• May 19 2024

ஈஸ்வரி கூறிய வார்த்தைகளால் கண்கலங்கிய கோபி – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பின உச்சத்தில் செல்லும் சீரியல் என்றால் பாக்கியலட்சுமி தொடர் தான்.ஒரு குடும்ப தலைவி படும் கஸ்டத்தையும் எப்படி வாழ்க்ககையை நகர்த்தி செல்லுகின்றார் என்ற மையத்தையும் கொண்டு கதை நகர்ந்து செல்லுகின்றது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

கோபி இரவெல்லாம் தூங்காமல் இருக்க பாக்கியா என்ன பிரச்சனை ஏன் இப்படி தூங்காம போனையே அடிக்கடி பார்த்துட்டு இருக்கீங்க? உடம்பு ஏதாவது முடியலையா ஒரு நல்ல டாக்டரா பார்க்கலாமா என அக்கறையோடு விசாரிக்க கோபி நான் அப்படியே செத்துப் போனாலும் உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் வரும் நீங்க நடு தெருவுல நிக்க மாட்டீங்க என கூற பாக்கியா நான் என்ன கேட்டா நீங்க என்ன பேசுறீங்க பணத்தை விட எங்களுக்கு நீங்க தான் முக்கியம் என சொல்கிறார்.

பின்னர் பாக்கியாவை கேள்வி கேட்காமல் கோபி படுத்து தூங்க சொல்ல பாக்கியமும் அமைதியாக படுத்து விடுகிறார். மறுநாள் காலையில் இனியா ஸ்கூலுக்கு கிளம்ப தயாராக இருக்க கோபி உடம்பு முடியல எழிலை கூட்டிட்டு போய் விட சொல்கிறார்.
அதன் பிறகு ஈஸ்வரி நீ ஏம்பா இப்படி இருக்க உனக்கு என்ன பிரச்சனை உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? டாக்டர்கிட்ட போகலாம் ஆனா இல்ல பணப்பிரச்சனை ஏதாவது இருந்தா அப்பாவோட பணத்தை எடுத்து செலவு பண்ணிக்க ஊர்ல இருக்க நிலத்தை விற்று விடலாமா என அக்கறையோடு விசாரிக்க கோபி கண் கலங்குகிறார்.

மேலும் இந்த பக்கம் ராதிகா கோபியிடம் பேசக்கூடாது என மயூராவிடம் சொல்ல அவர் நான் பேசுவேன் என பிடிவாதமாக கூறுகிறார். அதன்பிறகு ராதிகா வெளியில் சென்றிருந்த நேரத்தில் கோபி வீட்டுக்கு செல்ல அவரை எதுக்கு இங்கே வந்தீங்க என சண்டையிடுகிறார் ராதிகா. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement