• Sep 29 2024

போலீஸ் ஸ்டேஷனில் குத்தவச்சு உட்கார்ந்து இருக்கும் கோபி.. அடுத்த எபிசோட் ஷூட் இதுவா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது ரொம்பவும் எமோஷனலாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் தன் மகன்தான் மொத்த உலகமும் நம்பி இருந்த ஈஸ்வரி பழிச் சொல்லுக்கு உள்ளாகி மீண்டும் பாக்யா வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

குழந்தையை இழந்த ராதிகாவும், என் குழந்தையை கொன்னது உங்க அம்மா, உங்க வீட்டார்கள் தான் என ஈஸ்வரி மீது பழியை போட்டு கோபியையும் வெறுத்து தள்ளி வருகின்றார். 

அது மட்டும் இன்றி ஈஸ்வரி வீட்டில் இருக்கும்போது கமலாவும் குழந்தையை கொன்றதுக்காக உங்க அம்மாவை போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ள தள்ளிடுவேன் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் அமர்ந்து போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், அப்ப அடுத்த எபிசோடுல யார் கம்பி என்ன போயிருப்பாங்க என கெஸ்ட் பண்ணி வருகின்றார்கள். ஆனாலும் ராதிகா தான் ஈஸ்வரி மீது போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தாரா? அல்லது கோபி தனது கிச்சன் பிரச்சனையில் ஏதும் சிக்கிக் கொண்டாரா என தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.


Advertisement

Advertisement