• Mar 29 2025

பாக்கியாவுக்கு ஆப்பு வைத்துவிட்டு தலையில் துண்டுபோட்ட கோபி! பாயிண்ட்டை பிடித்த செல்வி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா கணக்கு பார்த்துக் கொண்டு இருக்க, இனியா ஏதும் ஹெல்ப் பண்ணவா என்று கேக்கிறார். ஆனாலும் இல்லை நீ தூங்கு என இனியாவை தூங்க வைக்கிறார்.

அதன்பின் கீழே வரும் போது ஈஸ்வரி தூங்காமல் இருக்கிறார். பாக்கியா போனதும் என்னால தான் இப்படி நடந்தது. நான் ராசி இல்லாதவர் என்று புலம்புகிறார். ஆனாலும் பாக்கியா அவரை சமாதானம் செய்து தூங்க வைக்கிறார்.

இதை தொடர்ந்து பாக்கியாவும் செல்வியும் வார்க்கிங் போகும் போது வீதியில் உள்ளவர்கள் ரெஸ்டாரண்ட் பற்றி கேக்கிறார்கள். அதற்கு செல்வி பதிலடி கொடுத்து அனுப்புகிறார்.


இதையடுத்து கோபியும் பாக்கியாவை பார்த்து கிண்டல் செய்கிறார். மேலும் மீண்டும் வீடு வீடா மசாலா கொடுக்க போறியா என பேசுகிறார். என்னதான் முயற்சி செய்தாலும் என்னை போல ஆக முடியாது என சொல்லுகிறார். கோபி போனதும் ஒருவேளை இது எல்லாம் கோபி சார்ட வேலையா இருக்குமோ என கேட்கிறார்.

இறுதியாக பாக்கியா வீட்டுக்கு வந்ததும் ஜெனியின் அம்மா வருகிறார். ஜெனி பற்றி சொல்லி கவலைப்படுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement