• Apr 28 2024

கவுதம் கார்த்திக் நடிப்பில்.. மிரட்டலாக வெளிவந்த 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் திரைவிமர்சனம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கௌதம் கார்த்திக் நடிப்பில் 'பத்து தல' திரைப்படத்தைத் தொடர்ந்து இன்று வெளியாகி உள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16, 1947. இப்படத்தினை எஸ்.பொன்குமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


படத்தின் கதைக்களம் 

அந்தவகையில் இப்படத்தினுடைய கதைக்களம் குறித்துப் பார்ப்போம். வெளி உலகத் தொடர்பை கிடையாத செங்காடு என்ற கிராமத்தில் ராபர்ட் கிளைவ் என்ற ஆங்கிலேயர் ஒருவர் அங்கு இருக்கும் மக்களை மிகவும் மோசமாக அடிமைப்படுத்தி 16 மணி நேரம் சிறுநீர் கழிக்க கூட விடாமல் வேலை வாங்குகிறார். 

அதுமட்டுமல்லாது அவருடைய மகன் ஜஸ்டின் கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார். இவ்வாறான நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. 

இருப்பினும் இந்த விஷயத்தை அந்த ஊர் மக்களிடம் இருந்து மறைக்கிறார் ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ். இந்த ராபர்ட் கிளைவ் குடும்பத்துக்கு உறுதுணையாகவும் உடந்தையாகவும் இருந்து வருகிறார் அந்த ஊர் ஜமீன்தார்.

கடைசியில் ஐஸ்டீன் அந்த ஜமீன்தாரின் மகளையும் அடைய ஆசைப்படுகிறான். இந்த விஷயம் அறியும் ஜமீன்தார் மகளை ஒரு தடையாக காதலிக்கும் பரமே ஜஸ்டின் எதிர்த்து போராடி அவனை கொலை செய்கிறான். 

இந்த விடயத்தை அறிந்த ராபர்ட் ‌‌ பரமுவை பழி தீர்க்க கிளம்புகிறான். இப்படியான ஒரு நிலையில் அடுத்து நடந்தது என்ன செங்காடு மக்களுக்கு விடுதலை கிடைத்ததா?இல்லையா..? பரமு நிலை என்ன ஆச்சு? என்பது தான் இந்த படத்தின் உடைய மீதிக்கதை.


படத்தை பற்றிய அலசல் :

அந்தவகையில் பரமு என்ற கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார் நடிகர் கௌதம் கார்த்திக்.

அத்தோடு மதராசப்பட்டினம் படத்துக்கு அடுத்ததாக சுதந்திரம் கிடைத்த காலகட்டதுக்கு ஏற்ற கதை மற்றும் உடை என அனைத்தும் பார்ப்போரை கவர்ந்து இழுக்கின்றது.

அதேபோல் படத்தில் இடம் பெறும் அரண்மனை முதல் கூரை வீடு வரை அனைத்தும் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு என்பன படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ‌‌


தொகுப்பு 

எனவே படத்தின் இயக்குநர் பொன் குமார் வித்யாசமான கதையை கையில் எடுத்து அதை அழகான படைப்பாக மக்களிடம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement