• Apr 28 2024

100 ரூபா பணத்திற்காக அந்த காட்சியில் நடிச்சதால தான் கருப்பு சுப்பையா இறந்தார் – அதிர்ச்சி தகவல் சொன்ன மனோ பாலா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80,90 காலகட்டத்தில் நடித்த பல பிரபலமான நடிகர்கள் என்ன ஆனார்கள் என்பதே பலருக்கும் தெரியாது. அந்த வகையில் பல கவுண்டமணி காமெடியில் கலக்கிய கருப்பு சுப்பையா என்ன ஆனார் என்பது உங்களுக்கு தெரியுமா ? தமிழ் சினிமாவில் 80களில் மற்றும் 90களில் கவுண்டமணி உடன் செந்தில் சேர்ந்தால் தான் காமெடி கலைகட்டும். ஆனால், செந்திலுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு கவுண்டமணியுடன் ஒருவர் நடித்திருக்கிறார்.

காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் சேர்ந்து இவரும் காமெடியில் அசத்தியுள்ளார். அவர் பெயர் தான் கருப்பு சுப்பையா. அந்த காலத்தில் வெள்ளை சுப்பையா மற்றும் கருப்பு சுப்பையா என்று இரண்டு சுப்பையா இருந்தனர். ஆனால், இருவருமே தற்போது உயிருடன் இல்லை என்பதே சோகம். அதில் இவர் கருப்பாக இருந்ததால் இவருக்கு கருப்பு சுப்பையா என பெயர் வந்தது. இவர் மதுரையில் உள்ள திருமங்கலம் ஊரை சேர்ந்தவர்.

கவுண்டமணியும் இவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 80 படங்களில் நடித்துளனர். ஆரம்ப காலத்தில் பழனிச்சாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிய மருது, ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூர பூவே, பட்டத்துராணி உள்ளிட்ட படங்களில் மெயின் ரோலில் நடித்தார். இவர் நடித்த பல காமெடி காட்சிகள் இன்றும் மறக்க முடியாத ஒன்று தான்.அதிலும், ஜல்லிக்கட்டு காளை படத்தில் வரும் ஜம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிள் என்னும் கேரக்டர், பெரிய மருது படத்தில் வரும் அண்டாவுக்கு ஈயம் பூசும் கேரக்டர், கட்டபொம்மன் படத்தில் ஆயிரம் மூட்டை நெல் அறுவை செய்யும் கேரக்டர் ஆகியவை மிகவும் பிரபலம் ஆனவை. கவுண்டமணியுடன் கருப்பு சுப்பையா செய்த இந்த காமெடிகள் எல்லாம் இன்றைய இளைஞர்கள் கூட ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

1960 ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிக்கத் துவங்கிய இவர் 1997 வரை பல்வேரு படங்களில் நடித்தார். இறுதியாக கங்கையமரன் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான தெம்மாங்கு பாட்டுக்காரன் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மனோ பாலா கருப்பு சுப்பையா இறப்பு குறித்து பேசி இருக்கிறார்.

அதில் பேசிய அவர் ‘சினிமாவில் ட்ரெண்டிங்கில் இல்லை என்றால் சீண்டக் கூட மாட்டார்கள். எத்தனையோ பேர் அப்படி சினிமாவில் அறிந்து இருக்கிறார்கள் கருப்பு சுப்பையா எல்லாம் ரூ.100 பணத்திற்காக உடல் முழுவதும் பெயிண்ட் அடிக்க சொன்னார்கள் என்று அழைத்து அடித்தார் அந்த பெயிண்ட் எல்லாம் அவருடைய உடலுக்குள் சென்று விட்டது அடுத்த நாளே அவர் இறந்துவிட்டார்’ என்று கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement