இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42 வது படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவூட் நடிகை திஷா பதானி தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த்ராஜ் ஆகிய நான்கு காமெடி நட்சத்திரங்கள் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இன்றைய படப்பிடிப்பிலும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் காமெடி காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் கிட்டத்தட்ட ஒரு முழு நீள காமெடி படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது .ஆனால் அதே நேரத்தில் சூர்யாவின் ரசிகர்களை திருப்திபடுத்த ஆக்ஷன் காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகளும் உண்டு என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!