• May 20 2024

ஜீவானந்தம் அப்பாவாக வந்திருக்கலாம் என்று கூறும் ஈஸ்வரியின் பிள்ளைகள்- கடும் கோபத்தில் அடிக்கப் பாய்ந்த கதிர்-Ethirneechal - Promo

stella / 8 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரேமோ வெளியாகியுள்ளது.

அதாவது குணசேகரனின் பிள்ளைகளுக்காக சக்தி புது பைக் வாங்கி கொண்டு வருகின்றார். அப்போது கதிர் எங்கப்பா கஷ்ப்பட்டு தான் எங்களை வளர்த்தாரு என்று சொல்ல,அப்போது குணசேகரனின் மகன் உங்க அப்பா செத்தாப் பிறகு நீங்க கஷ்டப்படுறீங்க, நாங்க அந்த ஆளு இருக்கும் போதே கஷ்டப்படுகின்றோம் என்கின்றார்.


பின்னர் குணசேகரனின் பிள்ளைகள் நாங்க ஜீவானந்தத்தைப் போய் பார்த்தோம். அவரை மாதிரி அப்பா எங்களுக்கு கிடைச்சிருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று சொல்கின்றனர். இதனை மறைந்து நின்று கேட்ட கதிர் கண்டவன் பற்றி இங்க எதுக்கு பேசுறீங்க என்று கேட்கின்றார்.

அத்தோடு அவர்களுக்கு அடிக்கப்போக ஈஸ்வரி இந்த வீட்டில எல்லோருக்கும் பேசிற உரிமை இருக்கு என கதிரைத் தள்ளி விடுகின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement