• Apr 28 2024

சமந்தாவுக்கு போன் போட்ட மாஜி கணவர்-அடடே இது தான் விசயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தாவை அவரின் முன்னாள் கணவரான நாக சைதன்யா தொடர்பு கொண்டு பேசினார் என தகவல் தீயாய் பரவி வருகின்றது.

 சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. தான் மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மயோசிடிஸ் பற்றி இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருந்தார். 

இதையடுத்து சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்து நலம் விசாரித்ததாக  பல வதந்தி பரவி இருந்தது.


இவ்வாறுஇருக்கையில்  சமந்தாவுக்கு போன் செய்து நலம் விசாரித்தாராம் நாக சைதன்யா. சமந்தாவை பிரிந்துவிட்டாலும் அவரை பற்றி தரக்குறைவாக நாக சைதன்யா பேசியது இல்லை. அத்தோடு  தான் சமந்தாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து இன்றுவரை நீக்கவும் இல்லை.

எனினும் இதை எல்லாம் பார்த்த ரசிகர்களோ, மீண்டும் சமந்தாவுடன் சேர்ந்து வாழுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இதற்கிடையே சமந்தாவை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளாராம் அவரின் முன்னாள் மாமனாரான நாகர்ஜுனா.


சமந்தா எங்கள் வீட்டை விட்டுச் சென்றாலும் அவர் என்றுமே எங்கள் மகள் தான் என்றார் நாகர்ஜுனா. மேலும்  அவர் சொன்ன இந்த விஷயம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.அத்தோடு சமந்தாவை தான் ஒருபோதும் மருமகளாக பார்த்தது இல்லை மகளாக தான் பார்த்தேன் என்றார் நாகர்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது.மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சமந்தா, ஓய்வு எடுக்காமல் யசோதா பட வேலையில் ஈடுபட்டுள்ளாராம்.




Advertisement

Advertisement

Advertisement