• Sep 21 2024

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா திடீரென விலகியதற்கு காரணம் என்ன தெரியுமா?- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இது பெங்காலி மொழியில் தயாராகி ஒளிபரப்பாகி வந்த ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காகும். இந்த சீரியலில் சுசித்ரா மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கணவனால் கைவிடப்பட்ட பெண் தனது வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக்காட்டுகின்றது. அதிலும் குறிப்பாக பாக்கியா சமையல் தொழில் மூலம் முன்னேறியது மட்டுமல்லாது ஆங்கிலம் கற்பது, கல்லூரி செல்வது என பிஸியாக இருக்கிறார்.


இதனால் எப்போது பாக்கியா கீழே விழுவார் என்பதைக் காண, ராதிகாவும் கோபியும் ஆவலாக இருக்கின்றனர்.இடையில் கேன்டீனில் பிரச்சனை ஏற்பட ராதிகா கிடைத்த கேப்பில் பாக்கியாவை கேன்டீனை விட்டுத் துரத்த வேண்டும் என்று சண்டை போட்டார். ஆனால் அது பாக்கியாவுக்கு சாதகமாக மாறிவிட்டது.

இந்த நிலையில் தற்பொழுது பாக்கிலட்சுமி சீரியலில் அமிர்தா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ரித்திகா இந்த சீரியலிருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக  காற்றுக்கென்ன வேலி சீரியல் பிரபலம் அக்ஷிதா அசோக் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் ரித்திகா நடிக்கும் அமிர்தா கதாபாத்திரம் அடுத்து வில்லியாக மாற இருப்பதால் அவர் வெளியேறிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement