• May 20 2024

பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்து விடாதீர்கள்- நயன்தாராவின் செயலால் அதிர்ச்சிக்குள்ளான தயாரிப்பாளர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவருடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத நடிகைகள் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அத்தோடு இவருடைய நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றார். இவர்களது திருமணமும் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இவர் தற்போது ஓவராக கெத்து காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதாவது தான் இனி நடிக்க இருக்கும் படங்களில் எல்லாம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றுதான் போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கூறி வருகிறாராம்.

தற்போது இவர் சோலோ ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் O2, விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்திலும் அப்படித்தான் தன் பெயரை போட வேண்டும் என்று நயன்தாரா படக்குழுவினருக்கு தொல்லை கொடுத்து வருகிறாராம்.

ஆனால் படக்குழு இன்றுவரை அவர் கூறியதற்கு சம்மதம் கூறாமல் இழுத்தடித்து வருகிறார்களாம். நயன்தாரா இப்படி அடுத்தடுத்து தொல்லை கொடுத்து வருவது படக்குழுவினரை எரிச்சலடைய வைத்துள்ளது. பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்து விடாதீர்கள் என்று அவரைப் பற்றி இப்போது திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement