• May 08 2024

'கையைப் பிடித்து நடப்பதை முதலில் நிறுத்துங்கள்'- நடிகை ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஐஸ்வர்யா ராய். இவர் பிரபல பாலிவூட் நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்திருப்பதோடு இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

அத்தோடு ஐஸ்வர்யா தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தனது குடும்பத்தாருடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் இவர் அண்மையில் மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது பத்திரிகையாளர்களின் போட்டோஷுட்டிற்கு போஸ் கொடுத்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது. அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் ஐஸ்வர்யா ராயை திட்டி வருகின்றனர்.

அதாவது ஆராத்யாவுக்கு 11 வயது ஆகிவிட்டது. ஆனால் அவரை இன்னும் குழந்தை போன்றே நடத்துகிறார் ஐஸ்வர்யா. ஆராத்யாவின் கையை பிடித்து நடப்பதை ஐஸ்வர்யா நிறுத்த வேண்டும்.

நேற்று பிறந்த தைமூர் அலி கான்(நடிகை கரீனா கபூரின் மகன்) எல்லாம் விமான நிலையத்தில் அவராக நடக்கிறார். ஆனால் ஆராத்யா பாவம். அவரால் இன்னும் அம்மாவின் பிடியில் இருந்து வெளியே வர முடியவில்லை.ஆராத்யாவின் ஹேர்ஸ்டைலை தயவு செய்து மாற்றுங்கள் ஐஸ்வர்யா. அவர் பிறந்ததில் இருந்து அதே ஹேர்ஸ்டைல். அவர் வளர்ந்துவிட்டார். அதனால் ஹேர்ஸ்டைலை மாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement