• May 11 2024

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்யவுள்ள இயக்குநர் செல்வராகவன்- அந்த ட்வீட்டை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் செல்வராகவன். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வந்த இவர் இறுதியா தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இது தவிர தற்பொழுது படங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் சாணிக்காயிதம் பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.தற்பொழுது திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்துள்ளார் செல்வராகவன் விரைவில் அந்த படம் திரைக்கு வர காத்திருக்கிறது.


மேலும் இவர் நடிகை சோனியா அகர்வாலைக் காதலித்து திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தார். அதன்பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு  கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கோலாகலமாக செல்வராகவன் கொண்டாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது. 


இந்நிலையில், திடீரென துணை குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவீட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது."தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்." என வாழ்க்கைத் தத்துவம் போல ஒரு டுவீட்டை தட்டி விட்டிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சி? என்றும் இரண்டாவது மனைவியையும் பிரிய போகிறீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement