• May 20 2024

யாராவது ஒருத்தராவது கூகுள் மேப்பை பாக்குறாங்களா? அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் தற்போது நாயகியாக நடித்திருக்கும் அனிதா சுரேந்திரன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு வித்தியாசமான கமெண்ட்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இந்த படத்தில் அவர் அஜித் மகளாக நடித்திருந்த நிலையில் அதன் பின்னர் ’நானும் ரவுடிதான்’ ’விஸ்வாசம்’ ’மாமனிதன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தார்.

தற்போது அவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வரும் ’பிடி சார்’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி ’வாசுவின் கர்ப்பிணிகள்’ தனுஷ் இயக்கி வரும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் ஆகியவற்றிலும் நாயகி ஆக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிதா சுரேந்திரனுக்கு நாயகி வாய்ப்பு கிடைப்பதற்கு இன்ஸ்டாகிராம் தான் காரணம் என்பதும் இன்ஸ்டாகிராமில் அவர் சிறுவயதில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது பக்கத்திற்கு மட்டும் பெரிய நடிகைகளுக்கு இணையாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் கிடைத்தனர் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து தற்போது பல திரைப்பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அதில் அவர் தனது கையில் உள்ள மொபைல் போனில் கூகுள் மேப்பை வைத்துக்கொண்டு யாரையோ தேடுவது போல் உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வரும் நிலையில் ’யாராவது ஒருத்தராவது அனிதா கையில் உள்ள மொபைல் போனில் உள்ள கூகுள் மேப்பை பார்க்கிறார்களா? என்ற கமெண்ட்டும், ’பிஞ்சிலே பழுத்து விட்டது’ என்றும் பலர் கமெண்ட் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement