• Apr 28 2024

இப்படியெல்லாம் கொடுமைப் படுத்தினார்களா...? நாக சைதன்யா குடும்பம்...உண்மைகளை உடைக்கும் சமந்தாவின் ஆண் நண்பர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில்  கொடிகட்டி பறக்கும் நடிகை சமந்தா நடிகர் நாகசைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திடீரென விவாகரத்து பெறப்போவதாக அறிவித்து இருந்தார்.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.


இவ்வாறுஇருக்கையில் இருவரும் பிரிவிற்கு பின்னர் தமது கரியரில் அதிக கவனத்தை பெற்று வந்தார்கள்.இந்நிலையில் சமீபத்தில் அரியவகை நோயான மயோசிடிஸ் நோயால் பாதிகப்பட்டு அவதிப்பட்டு சிகிச்சையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில், சமந்தாவின் நெருங்கிய Stylist நண்பரும் நடிகருமான ப்ரீதம் சமீபத்தில் ஒரு கருத்தினை கூறியுள்ளார். அதில், ஆண்கள் பெரும்பாலும் உண்மைகளை மறைக்ககூடிய குணம் கொண்டவர்கள்.


பெண்களுக்கு எதிராக வன்முறை, அடக்குமுறைகளை அதிகமாக கொண்டு உடலளவில் காயப்படுத்துவது சித்ரவதை செய்வது, விமர்சிப்பது போன்றவற்றை செய்வார்கள். மேலும் இப்படி ப்ரீதம் பகிர்ந்த கருத்து மறைமுகமாக நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தான் கூறியுள்ளார் என கூறப்படுகிறது.

அத்தோடு குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், கிளாமர் ஆட்டம் ஆடக்கூடாது என்று மாமனார் குடும்பம் கூறி கஷ்டப்படுத்தி இருப்பார்கள் என்றும் பல ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுவே சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு காரணம் எனவும் செய்திகள் தீயாய் பரவி இருந்தன.


சமந்தாவே அவருடன் வாழும் போது முள் படுக்கையில் படுத்தால் எப்படியிருக்கும் அப்படியொரு வாழ்க்கை என்று மறைமுகமாக பேசியிருந்தார் சமந்தா. தற்போது மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வர கடின முயற்சியும் சிகிச்சையும் பெற்று வருகிறார் சமந்தா.

Advertisement

Advertisement

Advertisement