• May 13 2024

பிக்பாஸ் வீட்டில்.. அதிக சம்பளம் வாங்கியது லாஸ்லியாவா..? ஜனனியா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாகிய விஜய் டிவியில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியானது கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது ஆறாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் குறிப்பாக இலங்கையை சேர்ந்த போட்டியாளர்கள் அதில் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-ஆவது சீசனில் இலங்கையிலிருந்து லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்குபற்றினர்.

தர்சன், லாஸ்லியா  இருவருக்குமே இந்நிகழ்ச்சி மூலம் சினிமாவில் புகழ் வெளிச்சம் கிடைத்தது. இதையடுத்து இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றனர்.


அதிலும் குறிப்பாக லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தற்போது சினிமா நடிகையாக பிசியாகிவிட்டார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-ஆவது சீசனிலும் இலங்கையை சேர்ந்த 2 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் பெயர் ஏடிகே, மற்றொருவர் பெயர் ஜனனி. இதில் ஏடிகே பாடகராக அறியப்பட்டவராக இருந்தாலும், ஜனனி புதுமுகமாகவே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் இந்நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுக்கும் முன்பே இவருக்கென டுவிட்டரில் ஆர்மி உருவாக்கி ரசிகர்கள் அதகளப்படுத்தி இருந்தார்கள்.

அதுமட்டுமல்லாது ஆரம்பத்தில் இவரது நடவடிக்கைகள் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் இருந்ததால், ஏராளமானோர் ஜனனிக்கு வாக்கு அளித்து ஆதரிக்க தொடங்கினர். ஆனால் போகப்போக அமுதவாணனுடன் இவர் கூட்டு சேர்ந்து விளையாடுவது, எப்பொழுதுமே அவருடனே அமுது அமுது என சுற்றுக்கொண்டு இருந்தது பலரையும் சலிப்படைய செய்தது. இதன்காரணமாக நேற்றைய தினம் அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.


இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவா, ஜனனியா அதிக சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஜனனிக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டு இருந்ததாம். அப்படி பார்த்தால் மொத்தம் இவர் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த 70 நாட்களுக்காக ரூ.17 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதுபோல் இலங்கையில் இருந்து சீசன் 3இல் கலந்துகொண்ட போட்டியாளரான லாஸ்லியாவுக்கு மொத்தமாகவே ரூ.5 லட்சம் தான் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் லாஸ்லியாவை விட ஜனனியே அதிகளவான சம்பளம் வாங்கியுள்ளார் என்பது தெளிவாகின்றது.

Advertisement

Advertisement

Advertisement