• Apr 25 2024

நட்சத்திரா பற்றிய உண்மையை உடைத்த தீபா...கார்த்திகை தீபம் சீரியலில் நடக்க போவது என்ன?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கார்த்திகை தீபம்.இத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். மேலும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கார்த்திக் தீபா கோவிலுக்கு போன விஷயத்தை அபிராமியிடம் சொல்ல அபிராமி கார்த்தியிடம் இனிமே தீபாவிடம் பழகாதே என்று சொல்ல கார்த்திக் அமைதியாக போகிறான்.

இதனையடுத்து வீட்டில் தீபா கார்த்திக் வாங்கி கொடுத்த செருப்பை பார்த்து ஃபீல் பண்ண மறுபக்கம் அபிராமி வீட்டில் தாலி உருக்கும் பூஜை நடைபெறுவதால் ஐஸ்வர்யாவிடம் நட்சத்திராவுக்கு போன் செய்து அவர் குடும்பத்துடன் வர சொல்கிறாள்.

ஐஸ்வர்யா நட்சத்திராவுக்கு போன் பண்ண போதையில் காதலர்கள் சென்றிருக்கும் நட்சத்திரா போன் எடுக்காமல் இருக்க ஐஸ்வர்யா டென்ஷனாகி ஃபோன் எடுக்கல என்று சொல்ல கார்த்திக்கை போன் பண்ண சொல்ல கார்த்திக் நட்சத்திராவுக்கு போன் பண்ணுகிறான். எனினும் அப்போது நட்சத்திரா போனை பார்த்து திடீரென்று கார் போதையில் ஒரு சுவற்றின் மீது மோதி நிற்க அந்த வீடு தீபாவின் கெஸ்ட் ஹவுஸ் என்று தெரிய வருகிறது. அடுத்து தீபா வெளியே வந்து பார்க்க போன் விழுந்து கிடக்க போனை பார்க்க கார்த்தி காலிங் என இருப்பதை பார்க்கிறாள்.

நட்சத்திரா போதையில் இருக்கிறதை பார்த்து போனை எடுத்து அட்டென்ட் பண்ண போக நட்சத்திரா போனை பிடுங்கி போனை கட் பண்ணி விடுகிறாள். கார்த்திக்கும் அவள் போனை எடுக்கவில்லை என்று சொல்ல ஐஸ்வர்யா நட்சத்திராவை பற்றி தவறாக அபிராமியிடம் சொல்கிறாள்.அத்தோடு மறுநாள் காலை தீபா கடைவீதியில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்க அப்போது தன் காதலுடன் போகும் நட்சத்திராவை பார்த்து பாலோ செய்தபடி போக நட்சத்திரா தோழியின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு சரக்கு அடித்து சிகரெட் பிடித்துக் கொண்டு என்ஜாய் செய்து கொண்டிருக்கிறாள்.

மேலும் அதை தீபா பார்த்து இதற்கு மேல் சொல்லாமல் இருந்தால் தவறு என்று அபிராமிக்கு போன் செய்து நீங்க பார்த்த மருமகள் நட்சத்திரா தவறான பொண்ணு கார்த்திக் சாருக்கு சரியான ஜோடி கிடையாது என்று சொல்ல அபிராமி கோபப்பட நான் சொல்வதை நம்பவில்லை என்றால் நீங்கள் நேரில் வந்து பாருங்கள் என்று சொல்ல அதிர்ச்சியில் அபிராமி புறப்படுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement