• Oct 02 2024

எதிர்நீச்சல் 2 -ஆனால் இவங்க இல்லையா! பிரபலத்தின் பதிவு! சோகத்தில் ரசிகர்கள்...

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

கடந்த 2022ம் ஆண்டு ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா என்ற 4 பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பான எதிர்நிச்சல் தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. டிஆர்பியில் டாப்பில் இருந்தது. 


ஆனால் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து அவர்களின் இறப்பிற்கு பிறகு கதையில் கொஞ்சம் டல் அடித்தது என்றே கூறலாம். தொடர் முடிந்த பிறகு அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் நிறைய கேள்வி எழுப்பி வர இப்போது அதற்கான பதில் வந்துள்ளது. விரைவில் எதிர்நீச்சல் சீரியல் 2வது சீசன் வரப்போகிறதாம். இது தொடர்பாக ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா பதிவு ஒன்றை போட்டுள்ளார்.


எனது அன்பான ரசிகர்களுக்கு, இதயம் நிறைந்த நன்றியுடன், சில காரணங்களால் நான் இனி எதிர்நீச்சல் பகுதி 2 இன் பாகமாக இருக்க மாட்டேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த பயணம் முழுவதும் நீங்கள் என் மீது பொழிந்த அளப்பரிய அன்பு மற்றும் ஆதரவிற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.


உங்கள் அசைக்க முடியாத ஊக்கம் எனக்கு உலகத்தை உணர்த்தியது, மேலும் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்த அனைத்து நினைவுகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் ஒரு அற்புதமான புதிய வாய்ப்பில் அடியெடுத்து வைக்கும்போது, ​​எதிர்காலத்திலும் நீங்கள் அதே அன்பையும் ஆதரவையும் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement