• May 20 2024

செஃப் வெங்கடேஷ் பட் இப்படி செய்ததால் கோபம் தான் வந்தது- குக்வித் கோமாளி முத்துக்குமார் கூறிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் மூன்று சீசன்கள் கடந்துள்ளது. சமீபத்தில் தான் மூன்றாவது சீசன் முடிவடைந்ததோடு டைட்டில் வின்னராக ஸ்ருதிகா தேர்வாகினார்

அதே போல இரண்டாம் இடத்தை தர்ஷனும் மூன்றாவது இடத்தை அம்மு அபிராமியும் பெற்றுக் கொண்டனர். இது தவிர கிரேஸ், வித்யுலேகா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில், வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து தமிழக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் நடிகர் முத்துக்குமார். இவர் நடித்துள்ள படத்தில், மிகவும் மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் வரும் நிலையில், குக் வித் கோமாளி நிகழச்சியின் ஆரம்பத்திலும், கோமாளிகள் மத்தியில் சற்று பயங்கரமான ஒருவராக தான் காணப்பட்டார்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல, நிகழ்ச்சி முடியும் போது, ஜாலியான ஒரு மனிதர் ஆகவும் வெளியே அறியப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் பிரபல சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில், செஃப் வெங்கடேஷ் பட் பற்றி முத்துக்குமார் தெரிவித்த தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது "பட் மேல் முதலில் அதிக கோபம் இருந்தது. பரத் மீது கரண்டியை எடுத்து வேகமாக அடித்தார். இவர் ஏன் இப்படி அடிக்கிறார் என்று தான் எனக்கு தோன்றியது. எனக்கு எதுவுமே தெரியாமல் என்னுடைய முதல் நாள் நடந்த சம்பவம் இது.அதன் பின்னர், அவருடன் உரையாடும் போது தான், பரத்தும் சும்மா இல்லாமல் அவரை கூப்பிட்டு கிண்டல் பண்ணுவது தெரிந்தது. உதாரணத்திற்கு உணவை தயார் செய்த பிறகு, பட்டை அழைத்து, 'பாத்துக் கத்துக்கோ பட்டுக்குட்டி' என பரத் விளையாட்டாக கிண்டல் செய்தார். அவர் எவ்வளவு பெரிய செஃப். அவரை இப்படி கிண்டல் செய்தால், என்ன செய்ய? " என முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தவிர வெங்கடேஷ் பட் இதுகுறித்து கூறிய போது, “இங்கு எல்லாமே ஃப்ரண்ட்லியாக ஜாலியாக டிவி நிகழ்ச்சிக்காக நடப்பதுதான். அது எதுவுமே நிஜமான அடி கிடையாது. நாங்கள் ஃப்ன்னுக்காக ஃபன்னாகவே அப்படி நடந்துகொண்டோம்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement