• May 05 2024

கணவர் அடித்ததில் மூளையில் ரத்தக்கசிவு-பூனம் பாண்டே

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் பூனம் பாண்டே.

இவர் லாக் அப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டும் நேரத்தில் பூனம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்ததாவது…

எனக்கு வாசனை தெரியாது. என் அருகில் இருப்பவர்களிடம் தான் அதை கேட்டு அறிவேன் .என் கணவர் அடித்ததில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதன் பின் வாசனை தெரியாமல் போய்விட்டது. ஆனால் தற்போது உடல் மற்றும் மனதளவில் வலிமையாக இருக்கிறேன் என்றார்.

லாக்அப் நிகழ்ச்சியிலும் இது பற்றி பேசியிருந்தார் பூனம். காதலர் சாம் பாம்பேவை கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பூனம் பாண்டே.

படப்பிடிப்புக்காக கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை மிரட்டியதுடன், தாக்கவும் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சாம் பாம்பேவை கைது செய்தார்கள்.

துபாயில் பிறந்து, வளர்ந்த சாம் பாம்பே விளம்பர பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement