தமிழ் சினிமாவில் பத்திரிகையாளராகவும் யூடியூப் பிரபலமாகவும் வலம் வருபவர் தான் பயில்வான் ரங்க நாதன். இவர் பல நடிகர் நடிகைகளைத் தவறாகப் பேசி பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.
சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் பயில்வான் ரங்கநாதன் சினிமா விழாக்களில் பல இயக்குநர்களிடம் எழுப்பிய கேள்விகளும் மிகவும் வைரல் ஆகியது. குறிப்பாக இயக்குநர் பாலா தயாரித்த "பிசாசு" திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் "பிசாசு என்று படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதனால் கருப்புச் சட்டை அணிந்து வந்திருக்கிறீர்களா?" என கேட்டார்.
எனினும் அதற்கு பதிலளித்த பாலா "பிசாசு என்றால் கருப்பாகத்தான் இருக்க வேண்டுமா? பிங்க் கலர் சட்டை கூட அணிந்திருக்கலாம்" என பயிவான் ரங்கநாதன் அணிந்து வந்த சட்டையை குறிப்பிட்டு கேலியாக பதிலளித்தார். மேலும் இந்த வீடியோ இப்போது வரை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு பல சர்ச்சைக்கு பெயர் போனவர் பயில்வான் ரங்கநாதன். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராஜன் "பயில்வான் ரங்கநாதன் ராதிகா சரத்குமாரை குறித்து அவதூறாக பேசினார். எனினும் அதன் பின் ஒரு முறை பெசன்ட் நகர் கடற்கரையில் பொது மக்கள் மத்தியில் பயில்வானை காலில் கிடந்ததை எடுத்து அடித்தார் ராதிகா" என தெரிவித்தார்.
எனினும் இந்த நிலையில் இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய பயில்வான் ரங்கநாதன் "ராதிகா பெசண்ட் நகர் கடற்கரையில் வைத்து என்னை அடித்தார் என ராஜன் சொல்கிறார். ஆனால் ராதிகாவுக்கும் எனக்கும் வாய்ச்சண்டைதான் நடந்ததே தவிர, யாரும் யாரையும் அடிக்கவில்லை. அத்தோடு இந்த சம்பவம் நடந்தது பெசண்ட் நகர் கடற்கரையில் இல்லை. திருவான்மியூர் கடற்கரையில்" என இச்சம்பவத்தை தெளிவுப்படுத்தியுள்ளார்.
இப்படித்தான் சமீபத்தில் ஒரு கடற்கரையில் ரேகா நாயருக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கு பெரும் விவாதம் ஏற்பட்டது. அந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது.
Listen News!