தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் அள்ளிக் குவித்திருக்கின்றது. மேலும் இவரக்கென்று எராளமான ரசிகர்கள் இருப்பதும் தெரிந்ததே.
இவ்வாறுஇருக்கையில் அமர்க்களம் படத்தின் போது நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார் அஜித்குமார்.
திருமணமாகி இரு குழந்தைகளை பெற்ற ஷாலினி சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்தும் அஜித்திற்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில், அஜித் - ஷாலினி திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் புதிய செய்தியை கூறியுள்ளார்.
ஷாலினி பிறப்பால் மலையாள கிறித்துவ சமுகத்தை சார்ந்தவர் என்பதால் அஜித் ஷாலினியை இந்துவிற்கு மாற வற்புறுத்தவில்லையாம். அதே சமயம், இந்து முறைப்படி, கிறிஸ்தவ முறைப்படி, முஸ்லீம் முறைப்படி என்று மூன்றுமுறை ஷாலினியை அஜித் திருமணம் செய்து கொண்டாராம்.
ஷாலினி பேட்மிட்டன் ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் கொண்டவராக இருந்தால் அவரை அந்த விளையாட்டை ஆடவும் வைத்திருக்கிறார்.
Listen News!