• May 19 2024

சத்தமே இல்லாமல் இடம்பெற்று வரும் அருண் விஜய்யின் படப்பிடிப்பு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான "முறை மாப்பிள்ளை" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகித் தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். அறிமுக படத்தை தொடர்ந்து தனது திரையுலக வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும் தொடர்ந்து 'பிரியம், இயற்கை, பாண்டவர் பூமி, கங்கா கௌரி' எனப் பல படங்களில் நடித்திருந்தார்.

எனினும் இப்படங்கள் யாவற்றையும் விட தல அஜித் உடன் இணைந்து அருண் விஜய் நடித்திருந்த 'என்னை அறிந்தால்' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை இவருக்குப் பெற்றுக் கொடுத்ததோடு அஜித் ரசிகர்களின் மனங்களிலும் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த 'குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், சகோ' போன்ற படங்களும் வெற்றிப்படங்களாக மாறாத் தொடங்கின.

இந்தநிலையில் தற்போது ஹரியின் இயக்கத்திலும் அருண் விஜய்யின் நடிப்பிலும் 'யானை' என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகின்றது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைக் கதைக்களமாகக் கொண்டமைந்த இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது பிரபல இயக்குநர் ஒருவரின் படத்திலும் கமிட்டாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது 'தெய்வத் திருமகள், தலைவி, மதராசப்பட்டணம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய படம் ஒன்றிலேயே நடிக்கவிருக்கின்றாராம்.

இப்படத்திற்கான ஒரு வார சூட்டிங்கும் ரகசியமாக முடிவடைந்ததாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு படக்குழுவினர் இப்படத்திற்கான வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும் இது தொடர்பான அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னமும் வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement