நடிகர் விஜய் தேவரகொண்டா மும்பையின் தியேட்டர் உரிமையாளர் காலில் விழுந்து இருக்கிறார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் லைகர்.
இப்படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.
Puri connects மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.இப்படம் ஹிந்தி தெலுங்கு தமிழ் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.
லைகர் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் படம் மோசமாக இருப்பதாகவே கூறிஇருந்தனர். அதனால் படத்தை இணையத்தில் மோசமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
படம் மிகப்பெரிய தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தெரிகிறது.இந்நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் காரணம் என மும்பையை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் மனோஜ் தேசாய் கூறி இருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் விஜய் தேவரகொண்டா அந்த தியேட்டர் உரிமையாளரை சந்தித்து அவரது காலில் விழுந்து இருக்கிறார். அவரிடம் தன் தரப்பு நியாயத்தை அவர் விளக்கி இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் இது லைகர் டீமின் publicity stunt எனவும் தற்போது சிலர் விமர்சித்து வருகின்றனர்.
Listen News!