• Jul 27 2024

மீண்டும் பைக் டூர் கிளம்பிய அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அவ்வளவு தானா? நயனின் சாபமா?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 9 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது வரை வெறும் 60% படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லைக்கா நிறுவனம் கடும் பொருளாதார சிக்கலில் இருப்பதால் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் ’வேட்டையன்’ படத்தின் ரிலீஸுக்கு பின்னரே இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகின.



இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிற்காக காத்திருந்த அஜித் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆகும் என்று தெரிய வந்துள்ளதையடுத்து பைக் டூர் கிளம்பி விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே உலகம் முழுவதும் பைக் டூர் செல்லும் திட்டம் அஜித்திடம் இருந்த நிலையில் அதன் ஒரு பகுதியை கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்துவிட்ட நிலையில் தற்போது அடுத்த டூருக்கு அவர் பைக்கில் கிளம்பி விட்டார் என்பதும் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித் பைக் டூரை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் ‘விடாமுயற்சி’ படத்தில் படப்பிடிப்பில் எப்போது கலந்து கொள்வார் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் ‘விடாமுயற்சி’ படமே கைவிடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதெல்லாம் நயன்தாராவின் சாபம் தான் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement