• Oct 05 2024

காத்திருந்து காத்திருந்து வெறுத்து போய் விட்டேன்.. வெளிநாட்டில் அதிதிராவ் ஹைத்ரிக்கு நடந்த கொடுமை..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகை அதிதி ராவ் ஹைத்ரி சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த நிலையில் அந்த நாட்டின் விமான நிலையத்தில் தனது லக்கேஜுக்காக 19 மணி நேரம் காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போய் விட்டேன் என இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதிராவ் ஹைத்ரி. அதன் பிறகு அவர் ஒரு சில தமிழ் படங்களிலும் பாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பிரிட்டன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ஹீத்ரு விமான நிலையத்திற்கு  சமீபத்தில் அதிதி சென்றபோது அவருடைய லக்கேஜ் பல மணி நேரமாக வரவில்லை என்றும் இதுகுறித்து இன்ஸ்டாவில் பக்கத்தில் தொடர்ச்சியாக புகார் அளித்தும் எந்தவித பதிலும் இல்லை என்றும் பதிவு செய்துள்ளார்.

 தனது லக்கேஜ் வரும் என்று பெல்ட்டை நோக்கி பல மணி நேரமாக காத்து கொண்டிருக்கிறேன் என்றும் இது போன்ற ஒரு மோசமான விமான நிலையத்தை நான் இதுவரை பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். 19 மணி நேரமாக காத்திருக்கும் பணி தொடர்கிறது என்றும் இப்போதும் காத்திருக்கிறேன் என்றும் எனக்கு என்னுடைய சூட்கேஸ் வேண்டும் என்றும் என்னைப் போலவே பல பயணிகள் காத்திருந்து வெறுப்படைந்துள்ளார்கள் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

 நேற்று மதியம் அவர் இந்த பதிவை செய்திருக்கும் நிலையில் தற்போது அவருடைய சூட்கேஸ் கிடைத்து விட்டதா என்பது குறித்து தகவல் இல்லை என்றாலும் அவருடைய பதிவுக்கு ஏராளமான நெட்டிசன்கள் அதிர்ச்சியுடன் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இதே போல் தங்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும்  பலர் கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement