• Apr 28 2024

'நடிகை சாய் பல்லவிக்கு யாரும் மிரட்டல் விடக் கூடாது'- ஆதரவு தெரிவித்த சிம்பு பட நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சாய் பல்லவி. இவர் நடிகர் ராணாவுடன் இணைந்து விராட பர்வம் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் பணியில் கலந்து கொணடார்.

அதில் கலந்து கொண்டு பேசிய இவர் சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்தேன். அதில் சொல்லப்படுவது போல காஷ்மீர் பண்டிதர்கள் அங்குள்ள இஸ்லாமியர்களால் கொல்லப்படுகிறார்கள் என்றால், அதே போல தான் இந்தியாவின் ஒரு பகுதியில் அதிலும் கோவிட் காலத்தில் மாடுகளை கொண்டு சென்ற ஒரு இஸ்லாமியரை சில இந்துக்கள் ஜெய்ஸ்ரீராம் சொல்லு என சித்ரவதை செய்தனர்.

மதத்தின் பெயரால் எங்கேயும் யாருக்கும் எந்தவொரு தொல்லையும் கொடுக்க கூடாது என்பது தான் தனது கருத்து என்று பேசினார். சாய் பல்லவியின் பேச்சு பாஜகவினருக்கு எதிரான பேச்சு என்றும் இந்து மதத்திற்கு எதிரான கருத்து என்றும் பலர் அவரை ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

அவர் சொன்னதில் எந்தவொரு தவறுமில்லை. சொந்த கருத்தை சொல்ல அவருக்கு முழு உரிமை உள்ளது என ஆதரவுகளும் குவிந்தன. நடிகை சாய் பல்லவிக்கு தனிப்பட்ட முறையில் மிரட்டல்களும் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், நடிகை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சாய் பல்லவி சொன்னது முற்றிலும் உண்மை என்றும், அவருக்கு யாரும் மிரட்டல் விடக் கூடாது என்றும், அவரை ட்ரோல் செய்யவும் கூடாது என்றும், தனது முழு ஆதரவு அவருக்கு உண்டு என கருத்து தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement