• Apr 28 2024

திருமணத்திற்கு பிறகு இப்படி ஒரு வேலையில் ஈடுபடும் நடிகை ரித்திகா- மாலைதீவிற்கு இதற்கு தான் வந்தீங்களாம்மா?- கடுப்பான நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா வினு என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார்.தனக்கு திருமணம் நடைப்பெற்றதை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்தார்.

திருமணத்தை சிம்பிளாக நடத்திய ரித்திகா, ரிசெப்ஷனை கிராண்டாக நடத்தினார்.ரித்திகாவின் ரிசெப்ஷனுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சென்று வாழ்த்தினார்கள்.இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.


இந்த நிலையில் ரித்திகா ஹனிமூன் கொண்டாட மாலைதீவுக்கு சென்றுள்ளார்.இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

இந்த நிலையில் ரித்திகா மாலைதீவு கடற்கரையில் சிற்பி எடுக்கும் வீடியோவை அவரது கணவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது தவிர ரித்திகா எப்போது மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement