• May 20 2024

நடிகை ஐஸ்வர்யாவிற்கு சினிமாவில் இத்தனை கொடுமைகள் நடந்துள்ளதா..?அவரே கூறிய தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நீயெல்லாம் ஹீரோயின் மெட்டிரியலே இல்லை. துணை நடிகைக்கு தான் லாய்க்கு என ஆரம்பக் காலங்களில் ஒருவர் தன்னை கேவலப்படுத்தியதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தெரிவித்திருக்கிறார்.மேலும் அப்படி சொன்னவர் முன்னிலையில் ஹீரோயினாக நடித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதத்தால் தான் இந்தளவிற்கு முன்னேறியிருப்பதாகவும் ஐஸ்வர்யா ராஜேஸ் தெரிவித்திருக்கிறார்.

எனினும் தற்போது சுழல்தி வோர்டெக்ஸ் என்ற தொடரில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிறம், நடுத்தவர்க்கத்துக்கே உரிய அழகு என அச்சு அசல் நமது பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஸ் ஆரம்ப காலக்கட்டத்தில் குரூப் டான்சராக சினிமாவிற்குள் உள் நுழைந்தவர். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று, பின்னர் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் ஆங்கர் ஆகி அப்படியே படிப்படியாக நடிகையானவர்.

மேலும் சினிமாவில் படத்தலைப்புகள், கதாப்பாத்திரங்களின் பெயர்கள் இதனை சுற்றி நம்பிக்கைகள் அதிகம். மேலும் அது ஐஸ்வர்யா ராஜேசின் சினிமா வாழ்க்கையிலும் உண்மை என நிரூபணமானது. ரம்மி படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த பிறகு சினிமா வாட்டாரங்களில் பிரபலமானார். அதிர்ஷ்டம் அவரது வாழ்க்கையிலும் ரம்மி அடித்தது.

அதன் பின்னர் காக்கா முட்டை அவரது நடிப்புத் திறமையை உலகிற்குக் காட்டியது. தர்மதுரை முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக்கியது. அதன்பின்னர், செக்க சிவந்த வானம், வட சென்னை, கனா, வானம் கொட்டட்டும் என முன்னணி இயக்குநர்களின் கதாநாயகி ஆகினார் ஐஸ்வர்யா ராஜேஸ்.மேலும் ஆரம்ப காலங்களில் நடிக்க வந்த போது, லொகேசன்களில் தண்ணி கூட குடிக்க மாட்டேன்.

மேலும் காரணம் அந்த சமயங்களில் நான் பெரிய ஹீரோயின் இல்லாததால் கேரவன் போன்ற வசதிகளெல்லாம் செய்து தரமாட்டார்கள். அதனால் தண்ணீர் குடிக்காமல் தாகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வேன். பண்ணையாரும் பத்மினி திரைப்படத்தில் தான் முதன் முதலாக கேரவன் கொடுத்தார்கள் என ஐஸ்வர்யா பேட்டி ஒன்றில் மனம் திறந்து தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement