• Apr 19 2024

அடடே இது நம்ம புன்னகை அரசியாச்சே-யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிரிப்பழகி என்றாலே அது நம்ம ஸ்நேகா தான். அழகிய தன் சிரிப்பினால் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மலையாளத்தில் ஒரு படத்தில் நடனமாடி சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இதைத்தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து விரும்புகின்றேன்,ஆட்டோகிராப் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பின்னர் 2009ஆம் ஆண்டில் நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் இணைந்து ஜோடியாக நடித்தார். அப்படத்தில் அவர்கள் இருவருக்கும் வளர்ந்த நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. அவ்வப்போது நடிகை சினேகா தனது குடும்பத்துடன் உள்ள அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் நடிகை சினேகாவின் புதிய புகைப்படங்கள் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.அதாவது நடிகை சினேகா தனது அக்காவுடன் பல வருடத்திற்கு முன் விருது நிகழ்ச்சியில் கலந்து பெற்ற விருது ஒன்றுடன் உள்ள ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி அதிக கவனத்தைப் பெற்று வருகின்றது

.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடே இது நம்ம புன்னகை அரசியா என்று ஆச்சரியமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement