• Sep 26 2024

தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்த நடிகர் விக்ரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் தனது வீட்டில் வேலை பார்த்த பெண்ணுக்கு பெசன்ட் நகரில் சொந்த வீடு விக்ரம் வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 

தமிழ் சினிமாவில் டப்பிங் ஆட்டிஸ்டாக தனது பயணத்தைத் தொடங்கி முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் இறுதியாக கோப்ரா திரைப்படம் வெளியாகியுள்ள. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.


இது தவிர மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் செம்டெம்பர் மாதம் 30ம் திகதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விக்ரம் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்த மேரி என்ற பெண்ணின் மகன் திருமணத்தை விக்ரம் சமீபத்தில் நடத்தி வைத்தார் என்பது தெரிந்ததே. திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு விக்ரம் நேரடியாக சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் 


அதுமட்டுமின்றி மணமகன் சார்பில் உள்ள அனைத்து செலவுகளையும் அவர் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை பெசன்ட் நகரில் பல லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கி மணமக்களுக்கு பரிசாக அளித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் விக்ரம் ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருவதோடு பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement