இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் மம்முட்டி.
இவர் நடிக்கும் படங்கள் அனைத்திற்குமே தனிரசிகர் பட்டாளமே உள்ளது.
இவ்வாறுஇருக்கையில் மம்முட்டி படப்பிடிப்பிற்காக இலங்கை வந்திருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மம்முட்டி மாருதி காருக்காக காத்திருக்கின்றார்.மம்முட்டியை அழைத்து செல்ல வந்த நபர் தாமதமாக வந்தது மட்டுமில்லாமல் மம்முட்டி யார் என்று தெரியாமல் கையில் பெயர் எழுதிய மட்டையுடன் விமான நிலையத்துக்குள் தேடுகின்றார்.இதன் பிறகு மம்முட்டி அவரை அழைத்து நான் தான் மம்முட்டி என்று அறிமுகப்படுத்தி மாருதி 800 காரில் ஏறுகிறார்.
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மம்முட்டிக்கு இப்படி ஒரு நிலையா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் அந்த வீடியோ Kadugannava Oru Yathrakurippu படத்தின் ஷூட்டிங்கின் போது அருகில் யாரோ ஒருவர் எடுத்து வெளியிட்டதாகும்.
ஷூட்டிங் வீடியோவை தவறாக இணையத்தில் இப்படி பரவ விட்டிருக்கின்றனர். இதைப் பார்த்து நெட்டிசன்களும் கலாய்த்து வருகிறார்கள்.
Listen News!